Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிளாஸ்டிக் கிடங்கில் தீ – ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலாயின

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கரியமாணிக்கம் பிரிவு சாலையில் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த மணி மகன் நந்தகுமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலவன் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நந்தகுமார் நேற்று மாலை வரையிலும் கம்பெனியில் இருந்துள்ளார். பின்னர் இவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திடீரென தீ வைத்ததால், ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

அவ்வழியாக சென்றவர்கள் சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சமயபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *