அமைச்சர் தமிழ்நாடு அரசு 23.11.2025 அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டிற்கு ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் 60000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்யப்பட்டது.
மேலும், இத்திட்டமானது நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை. கல்பாக, இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினைமீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் தூண்டுதல் முறையில் பெருவிரலிகளாக வளர்க்கப்பட்டு 60000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சு பெருவிரலிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் இருப்பு செய்யப்பட்டது. மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள்
ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், ஆறுகளின் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை, (Sustainable Stock Maintenance of Native Fish Species in River System) ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் பயன்படுகிறது.
இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர் தங்கலட்சுமி திருச்சி (மண்டல) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருச்சி மற்றும் கரூர் (இருப்பு) திருச்சி, இதர அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், கிராம பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments