Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கஞ்சா வைத்திருந்த ஐந்து இளைஞர்கள் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை சட்டவிரோதமாக திருச்சி மாவட்டம் முசிறியில் இளைஞர்கள் அதிகளவில் புழங்குவதாகவும், குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இளைஞர்கள் கூடி நின்று போதை வஸ்துக்களை பயன்படுத்துவதோடு சில்லறையில் விற்பனை செய்து வருவதாகவும் முசிறி டிஎஸ்பி யாஸ்மினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாப்பாயி அம்மன் கோவில் பின்புறம் சந்தேகப்படும் படியாக நின்ற 5 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முசிறி, கடைவீதி, கூடை மறக்கார தெருவை சேர்ந்த நித்தீஸ்வரன் (22), முசிறி அருகே கீழப்பள்ளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25), முசிறி அரசு மருத்துவமனை பின்புறம் பெரியார் நகரை சேர்ந்த மோகன் (25),

மலையப்பபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (19), கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் (21) ஆகியோரிடமிருந்து 750 கிராம் எடை உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து கரூர் மாவட்டம், குளித்தலை நீதிமன்ற கிளை சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *