Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 11 நாட்கள் ஆதி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, கொடியேற்ற நிகழ்விற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து 3:45 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் கொடி படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டன. சரியாக 6:20 மணிக்கு மீன லக்கணத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டனர். இன்று முதல் 11 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

மேலும் ஆதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 31ம் தேதி தங்க கருட வாகனத்திலும், உறையூர் கமலவல்லி நாச்சியார் நம்பெருமாள் சேர்த்தி சேவை வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி அன்றும்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை 5ம் தேதியும், கோரதம் எனப்படும் பங்குனி தேர் உற்சவம் 6ம் தேதி அன்றும் நடைபெற இருக்கின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *