Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பை இன்று (27.03.2024) சமயபுரம் ரெட்டியார் மகால் அருகே திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில், திருச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், திருவெறும்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அறிவழகன், இலால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரமோகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி கொடி அணிவகுப்பில் மத்திய பாதுகாப்பு படையினர் 52, திருச்சி மாவட்ட ஆயுதப்படையினர் 75, திருச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு பிரிவில் 8 காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர்- 60 என சுமார் 210 பேர் கலந்து கொண்டனர். கொடி அணிவகுப்பானது சமயபுரம் ரெட்டியார் மகால் அருகே ஆரம்பிக்கப்பட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் வளைவு, சமயபுரம் கடைவீதி, நரசிம்ம மங்கலம் தெரு வழியாக வந்து சமயபுரம் காவல் நிலையம் முன்பு நிறைவடைந்தது.

மேலும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருப்பின் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் : 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *