Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் (22.05.2023) அன்று நான்கு சக்கர வாகனங்கள் ஏலம்

திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 03 நான்கு சக்கர வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விடப்படுகிறது. வருகின்ற (22.05.2023) காலை 10:00 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் (18.05.2023)ம் தேதி காலை 10:00 மணி முதல் (19.05.2023) LOT 6060 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (22/05/2023) காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு சக்கர வாகனத்திற்கு 18% முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *