காந்தி மார்க்கெட் மளிகை கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!

காந்தி மார்க்கெட் மளிகை கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளுக்கு தற்காலிக சந்தைகளில் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில்,காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மளிகை கடை, வெல்லமண்டி, மிட்டாய் கடை உள்ளிட்டவை செயல்பட அனுமதி வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்.

கடந்த 70 நாட்களுக்கும் மேலாக திருச்சி காந்தி மார்க்கெட் திறக்காத காரணத்தினால் காய்கறி வியாபாரிகள் தவிர மீதமுள்ள வெல்லம், அரிசி, மிட்டாய் கடைகள் திறக்கப்படாமல் உள்ளதால் இன்றளவும் பொருளாதாரரீதியாக மன உளைச்சலால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் எங்களுக்கு வாழ்வதற்கு என்ன செய்வதும் என்றும் கோரிக்கை எழுப்பினர்.

எனவே காலை 10 மணி முதல் 6 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.