Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் இன்று மூன்றாவது நாள் அனைத்து சிலைகளும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கபட்டன. மாநகரில் உள்ள சிலைகள் காவிரி பாலத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தையொட்டி திருச்சி காவிரி பாலத்தில் தடுப்பு கட்டைகள், ஆங்காங்கே மேடை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது. 

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையிலும், சிலைகள் கரைக்கப்பட உள்ள காவிரி பாலத்திலும் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சமயத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் போக்குவரத்தில் அவ்வப்போது சிறு, சிறு மாற்றங்கள் செய்து போக்குவரத்து சரி செய்யபட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *