Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் சனிக்கிழமை(25.06.2022) அன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- மாவட்ட ஆட்சியர் தகவல்

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வேர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 25.06.2022-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

 இக்கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளைபதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்டதகவலை திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *