Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

126 இடங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் – திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் 19.09.2021 அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 126 இடங்களில் 19.09.2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மேற்காணும் பட்டியல் www.trichycorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுநாள்வரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியைப் போட்டு நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினர்களையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *