Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் அரசு பேருந்து ஜப்தி

திருச்சி மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி உத்தரவின் பெயரில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட அரசு பேருந்து ஒன்று ஜப்தி செய்யப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடந்த சாலை விபத்தில், அரசு பேருந்து மோதி, இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணித்த ஸ்ரீரங்கம் திருவடி தெருவை சேர்ந்த சாமிதுரை என்பவர் பலியானார். 

அது தொடர்பாக பலியானவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 16 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று வரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்று ஜப்தி செய்யப்பட்டு, நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *