Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நாளை 17.06.2021 திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட் தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மருத்துவ முகாம்  நாளை 17.06.2021 காலை 9 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பு ஊசி செலுத்தப்படும். இந்த தடுப்பூசி செலுத்திட விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *