Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் – கணவன், மனைவி கைது

திருச்சி உறையூர் காவல் நிலையம் புத்தூர் பகுதியில் மதுரை வீரன் சாமி கோவில் தெருவில் வசித்து, காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வரும் சுப்பிரமணியன் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், குட்கா ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வீட்டில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இங்கு பதுக்கி வைத்து காந்தி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தது தெரிய வருகிறது. மேலும், போதைப் பொருட்கள் பெங்களூரில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *