Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் – குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரை சாலை அகலப்படுத்த கோரிக்கை

திருச்சி கரூர் சாலையில் செல்லும் தமிழக முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கு

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை அதிக விபத்து நடக்கும் சாலைகளில் இச்சாலையும் ஒன்றாகும் இச் சாலையில் குடமுருட்டி பாலம் முதல் பெட்டவாய்த்தலை வரை தினசரி தொடர் விபத்துகளால் சாலை பயனீட்டாளர்கள் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர்.

இச்சாலையில் கடந்த 2024 ஐனவரி முதல் டிசம்பர் வரை  112 விபத்துகளும் 44 விபத்து மரணங்களும் நடந்துள்ளது. தற்போது ஜனவரி 2025 முதல் தற்போது செப்டம்பர் வரை 15 க்கும் மேற்பட்ட. விபத்து மரணங்கள் நிகழ்ந்து உள்ளது.

இச்சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் மற்றும் கரூர், கோவை வழியாக  பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்ல சாலை பயனீட்டாளர்கள் இச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில் கடந்த மாதத்தில் வருவாய் கோட்டாட்ச்சியர் விபத்தில் உயிர் இழந்தது குறிப்பிடதக்கது.

இச்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் இருந்து அந்தநல்லுர் பகுதியில்  இணையும் அரை வட்ட சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்க்கு வரும் பட்சத்தில் வாகன போக்குவரத்து  அதிக அளவில் நடைபெறும், இதனால் இச் சாலையில் இன்னும் அதிக விபத்துகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களின் நலனை  கருத்தில் கொண்டு  குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரை சாலையை அகல படுத்தி சென்டர் மீடியன் அமைத்து சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டுகிறோம் என்று கூறினார் விழிப்புணர்வு பணியில்
சாலை பயனீட்டாளர் நல குழு அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *