Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சரித்திர பதிவேடு ரவுடி திருச்சியில் விரட்டி சுட்டு பிடிப்பு – காவல்துறையினர் காயம்

கோவை மாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் வழக்கில் (House Breaking) தொடர்புடைய திண்டுக்கல் வடக்கு நகர காவல் நிலைய சந்தேக சரித்திர பதிவேடு குற்றவாளி (Suspect HS)] கைது செய்ய முற்படும்போது உதவி ஆய்வாளரை தாக்கியதால் எதிரியை துப்பாக்கியால் சுட்டு பிடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பு.

ராஜசேகர் (32/25) திண்டுக்கல் பெரிய கடை வீதி, பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர். திண்டுக்கல் வடக்கு நகர காவல் நிலைய சந்தேக சரித்திர பதிவேடு குற்றவாளி (Suspect HS) போத்தனூர் காவல் நிலைய (குற்ற எண் 524/25 Night House Breaking case). குற்ற வழக்கில் கோவை மாநகர போலீஸ் தனிப்படை SI பாஸ்கர் மற்றும் 4 போலீசார் இன்று 11:40 மணியளவில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாச நகரில் வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்துள்ள குற்றவாளி ராஜசேகரை தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் இந்தப் பகுதியை அடைந்ததும். பதுங்கியிருந்த ராஜசேகரை கோவை தனிப்படை போலீசார் பிடிக்க முற்படும்போது, அவர்களிடமிருந்து தப்பித்து உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் மு.நி.கா கண்ணன் ஆகியோரை கத்தியால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி பக்கத்து தெருவில் ஓடிய போது உதவி ஆய்வாளர் அவரை சுட்டு பிடித்துள்ளனர் பாஸ்கர் சுட்டு பிடித்துள்ளார்.

சுடப்பட்டதில் ராஜசேகருக்கு இடது விலாவிலும், இடது தொடையிலும் துப்பாக்கி குண்டு பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வெட்டுக்காயம்பட்ட உதவி ஆய்வாளர் பாஸ்கர, மு.நி.கா. கண்ணன் ஆகியோரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *