Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மனித உரிமைகள் தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்  மேயர் மு. அன்பழகன் ,தலைமையில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு.   மேயர் மு.அன்பழகன்   மனித உரிமைகள் நாள் உறுதிமொழி வாசிக்க  துணை மேயர்  ஜி. திவ்யா மற்றும் உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள்  இன்று(10.12.2022)   எடுத்துக் கொண்டார்கள்.

 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும் இன்று (10.12.2022) ஏற்றனர்.

மனித உரிமைகள் தின உறுதிமொழி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்று மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று தான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மதைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.சங்காதாரிணி. அலுவலக மேலளார் (குற்றவியல்) ச.சண்முக சுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

          

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *