Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் அருகே சாலைப் பணியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு – போலீசார் விசாரணை

திருச்சி சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கான புதிய சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் இன்று ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த குப்பை பகுதியில் மனித எலும்பு கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வைவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தது 70 வயது ஆணின் எலும்புக்கூடு என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் இறந்தவர் யார் என கண்டுபிடிப்பதற்காக எலும்புக்கூட்டை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சமயபுரம் மற்றும் புறநகர் பகுதியில் சமீப காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து புகார்கள் ஏதேனும் உள்ளதா அதில் கண்டுபிடிக்காமல் இருப்பவர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இவர் இறந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த உடல் முழுவதும் அழுகி எலும்பு மட்டுமே காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து இந்த இறந்து போன நபர் யார் என்பது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமயபுரம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு செல்லும் புறவழிச் சாலை அமைக்கும் இடத்தில் எலும்புக்கூடு எடுக்கப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

https://www.threads.net/@trichy_vision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *