Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கஞ்சா வழக்கில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பழைய பர்மா காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சரவணன் (எ) பரட்டை சரவணன் (27). இவன் மீது கஞ்சா விற்ற வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சரவணன் கஞ்சா விற்பதற்காக  ஒரு கிலோ 100 கிராம் வைத்திருந்த பொழுது திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தற்பொழுது பரட்டை சரவணன் திருச்சி மத்திய சிறையில் உள்ளான். இந்த நிலையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பரட்டை சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *