Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா

திருச்சி சிந்தாமணி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மண்டல அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளிடம் பேசுகையில்…பகுஜன் சமாஜ் கட்சியின் 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர் இன்னும் 2 நாட்களில் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். இந்தியா முழுவதும் மாயாவதி தனித்து போட்டியிட உள்ளார். மக்களை சார்ந்து அரசியல் எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது

இந்தியாவில் கார்பரேட் கம்ப்னிகளிடன் பணம் பெறாத கட்சி பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி மக்களை அரசியல் படுத்த்கும் கட்சி அரசியல் என்பது குடும்பம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ , மொழி சார்ந்ததோ கிடையாது சமூக விடுதலை பொருளாதார விடுதலை சமத்தும் சகோதரத்துவம் உருவாகும் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி 28 வருடமாக தேசிய கட்சியாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மக்களிடம் இன்னும் தெரியபட வில்லை தெரிய படுத்த கஷ்டப்பட வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாள் மோகத்தில் செல்கின்றனர் கொள்கை தத்துவம் கிடையாது. திராவிடர் கழக கொள்கையில் இருந்து திமுக வந்தது ஆனால் அவர்களும் வடிவேலு குஷ்பு வை வைத்து ஓட்டு கேட்டனர்.

கார்பரேட் கம்பெனியை சார்ந்து அரசியல் நடைபெறுகிறது. போதை பொருள் இந்திய முழுவதும் உள்ளது அதானி அம்பானி தனியார் துறைமுகம் ஆன பின்பு எல்லா பொதை பொருட்களும் வருகிறது. ஒரு காலத்தில் பெண்கள் அரசியல் பேசுவார்கள் தற்போது யாரும் அரசியல் பேசுவது இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி பாஜக காங்கிரஸ் கூட்டணி இல்லாத மாநில கட்சிகள் இருந்தால் கூட்டணியில் சுய மரியாதை தனி தன்மை இருந்தால் கூட்டணி வைக்க சொன்னார்கள். EVM-ற்கு எதிராக குரல் கொடுக்கும்  கட்சி பகுஜன் சமாஜ் கட்சி என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *