Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு துவக்கம்

திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாக, மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து  பேசிய அவர், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஓமைக்ரான் பரிசோதனை குறித்து தீவிர ஆய்வுசெய்து வருகின்றனர் என்றும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 32 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

இந்த ஓமைக்ரான் சிகிச்சைப் பிரிவில் ஐசியுக்கு என தனியா 8 படுக்கைகளும், மீதம் உள்ள 24 படுக்கைகளும் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நேற்று இரவு 10.45 மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தொடர்ந்து, அவரது சளியின் மாதிரி சென்னையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது அந்த நபர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஓமைக்ரான் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர கண்காணிப்பில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் முதல்வர் வனிதா தெரிவித்தார். 

மேலும், கொரோனா முதல் மற்றும் 2ஆம் அலை பரவலை விட தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் கொடிய தொற்று நோயாக உள்ளதாக கூறிய வனிதா, இந்த நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். இருந்த போதும், பொதுமக்கள் சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முக கவசம் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடித்தால் நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *