Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநில அளவிலான யோகா போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம்வென்ற ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்வி குழுமம்

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான யோகா போட்டி கடந்த திங்கள்கிழமை அன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் இந்திய விளையாட்டு பிரிவு சார்பில் “யோகா சாம்பியன்ஷிப் 2021” ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறையினரால் நடத்தப்பட்டது. மாநில அளவில் மொத்தம் 550 கல்வி நிறுவனங்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்வி குழுமத்தின் சார்பில் சந்தானம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி,திருச்சி ஸ்ரீ ஜெயேந்திர மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

24 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் என் சுகீஸ்வரி முதல் பரிசையும் பிரியதர்ஷினி இரண்டாவது பரிசையும் ஆர்கே சோபிக்கா மூன்றாவது பரிசை வென்றுள்ளனர்.

 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாலசுகுணா இரண்டாவது பரிசையும் ஹரிணி மூன்றாவது பரிசை வென்றுள்ளார்.

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் கல்வி குழுமம் சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *