இந்திய அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு பசுமை தங்க விருது!!

இந்திய அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு பசுமை தங்க விருது!!

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு  பசுமை ரயில் நிலைய சான்றிதழ் மற்றும் தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் இந்திய பசுமைக் கட்டிட கவுன்சிலிங் சார்பாக 3 வருடத்திற்கு ஒரு முறை இந்தியாவில் சிறப்பான முறையில் பசுமையுடன் பராமரிக்கப்படும் ரயில் நிலையங்களுக்கு விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு பசுமை மற்றும் தூய்மை, ஆற்றல் திறன், புதைபடிவ எரிபொருளின் பயன்பாடு குறைதல், ஆரோக்கியம் குடியிருப்பாளர்களின் நல்வாழ்வு போன்றவற்றை மதிப்பீடு செய்தது.

இதில் திருச்சி ரயில் நிலையம் இந்திய அளவில் 72 புள்ளிகள் பெற்று பசுமை தங்க மெடல் விருது வழங்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த விருது திருச்சி ரயில்வே நிலையத்தினை சார்ந்து இருக்கும்.