Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 260 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 133 மையங்களில் தேர்வெழுத உள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 16,802 மாணவர்களும், 17,590 மாணவிகளும் என மொத்தம் 34392 மாணவ /மாணவியரும் எழுதுகின்றனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் அந்தந்த துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று 12’ம் வகுப்பு பொதுத் தேர்வு 10 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ்  திருச்சியில் தான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறவுள்ள வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும், ஆய்வு செய்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதே போன்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேர்வு நடைபெறும் அறைகளில் சென்று ஆய்வு செய்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *