Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ரெம்டெசிவர் மருந்துக்கு இரவிலும் காத்திருக்கும் பொதுமக்கள் பரிதாபம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு போடப்படும் ரெம்டெசிவர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் இந்த மருந்து போடப்பட்டு வந்தாலும், சில தனியார் மருத்துவமனையிலும் மற்றும் கள்ளச்சந்தையில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிக அளவில் பணம் கொடுத்தும் மருந்து கிடைக்காத சூழல் ஏற்பட்டு வந்தது.

இதற்காக தமிழக அரசு ரெம்டெசிவர் மருத்து அரசு மருத்துவமனையிலேயே கிடைக்க கிடைக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் மருந்து விற்பனை நேற்று தொடங்கப்பட்ட நிலையில் அரைமணி நேரத்தில் 350 குப்பிகள் விற்று தீர்ந்து விட்டது.

இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மருந்து விற்பனை இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்து. ஆனால் ஏராளமான பொதுமக்கள் இன்று காலை இயன்முறை சிகிச்சை கல்லூரி முன்பு குவிய தொடங்கினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இன்று விற்பனை இல்லை என தெரிவித்தார். ஆனால் ரெம்டெசிவர் மருந்து கேட்டு 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையெடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து நாளை மீண்டும் மருந்து விற்பனை தொடங்கப்படும் என்பதால் இன்று இரவே பொதுமக்கள் இயன்முறை சிகிச்சை கல்லூரி முன்பு காத்திருக்கின்றனர். நாளை முழு ஊரடங்கு உள்ள நிலையில் குடிநீர், கழிப்பிட வசதிகளின்றி ஆண்களும், பெண்களும் இரவு முழுவதும் காத்திருப்பது வேதனை அளிக்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *