Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி – கார் பரிசு பெற்ற காளையர் – 63 பேர் காயம்

திருச்சி மாவட்டத்தில் முதன்மையான மற்றும் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டி, பெரிய சூரியூரில் உள்ள ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு தை மாதம் 2ஆம் நாள் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை கிராம திடலில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக நிரந்தர மைதானம் அமைத்து தர வேண்டும் என, ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலுடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து, நேற்று துணை முதல்வர்
திறந்து வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்காகவும், பாதுகாப்பு, பார்வையாளர்கள் வசதி, வாடிவாசல், தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்க கேலரி கட்டப்பட்டுள்ளது.

750 ஜல்லிக்கட்டு காளைகள் 500 மாடுபிடி வீரர்கள் 10 சுற்றுக்களாக திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண இருக்கிறது.

மேலும் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில்,
முதல் பரிசாக கார்,
இரண்டாம் பரிசாக டூவீலர் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் களத்தில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, சேலை பரிசாக வழங்கப்பட உள்ளது.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை பிடித்த மூர்த்தி என்ற வாலிபருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசாக 11 காளை பிடித்த இளைஞர் யோகி என்பவருக்கு இருசக்கர மின்சார வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பரிசை திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள் வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *