Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கரூரில் செப்டம்பர் 17 முப்பெரும் விழா – திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்வீர்!

செப்டம்பர்  17ஆம் தேதி  கரூரில்  கழக முப்பெரும் விழா !

மாவட்ட கழகச் செயலாளர் – அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !

திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 4:00 மணி அளவில் கரூர்  மாவட்டம் கரூர் பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் – கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும்   கழக முப்பெரும் விழாவாக பொதுக்கூட்டத்தில் கீழ்க்கண்ட அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றேன்.

இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,  பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர் – நிர்வாகிகள், அனைத்து  அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்,  கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறினார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *