அரசியல்  என்னை போன்ற படிக்காதவர்கள் உள்ள இடம். படித்தவர்கள் மட்டுமே உள்ள  இடமல்ல. கே.என்.நேரு பேச்சு

அரசியல்  என்னை போன்ற படிக்காதவர்கள் உள்ள இடம். படித்தவர்கள் மட்டுமே உள்ள  இடமல்ல. கே.என்.நேரு பேச்சு

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு பேசுகையில்...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஐடி பார்க்,
ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்ககளை 2006- 2016 கொண்டு வந்தவர் கலைஞர்.

ஆளும் அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும்.
37 புதிய முகங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.


அரசியல் 
என்னை போன்ற படிக்காதவர்கள் உள்ள இடம். படித்தவர்கள் மட்டுமே உள்ள  இடமல்ல. எனவே வேட்பாளர்கள் கவனத்துடன் பேச வேண்டும். வேட்பாளர்களாக இருப்பவர்கள் குறைவாக பேச வேண்டும். நிறைவாக செயலாற்ற வேண்டும். 

தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில்
அமமுக சார்பில் போட்டியிடும்  மனோகரன் அரசு கொறடாவாக இருந்த போது, தற்போது அதே தொகுதியில் அதிமுகவை
சார்பில் போட்டியிடும்
அமைச்சரான  வெல்லமண்டி நடராஜன் அவரிடம் பணியாற்றினார்.
தற்போது வெல்லமண்டி அமைச்சராக இருக்கும் போது மனோகரன் அவரை எதிர்த்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
முதலாளியும், தொழிலாளியும் ஒரே இடத்தில் போட்டியிடுவது திமுகவிற்கு சாதகமாகவே அமையும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5