கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளக்குடி பகுதியில் இன்று 05.11.2025 மதியம் 13.00 மணியளவில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி கொள்ளிடம் காவல் ஆய்வாளர் திரு. வீரபாண்டியன் மற்றும் காவலர்களுடன் இனைந்து கொள்ளிடம் லால்குடி சாலையில் வாகன சோதனை செய்து

கொண்டிருந்த போது லால்குடி நோக்கி சென்ற சந்தேகத்திற்கிடமான TN 45 AY-5677 பதிவென் கொண்ட டாடா இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்த போது காரின் பின் பகுதியில் 75 கிலோ குட்காவை மறைத்து வைத்து கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக மேற்படி வாகனத்தை ஓட்டி சென்ற சிவாஜி ராஜா, 37, த.பெ. ராஜேந்திரன், கொப்பாவளி, லால்குடி தாலுகா என்பவரை குட்கா மற்றும் காருடன் கைது செய்து நிலையம் அழைத்து வரப்பட்டு கொள்ளிடம் காவல் நிலைய குற்ற எண். 370/25, U/S 123 BNS 6 r/w 24(1) Cotpa Act -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்படி வாகனசோதனையின் போது குட்காவை கைப்பற்றிய கொள்ளிடம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இகாய அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments