Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் தொகுதியில் கிராமங்களில் வீடு வீடாக கு.ப.கிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் கு.ப  கிருஷ்ணன்  தொடர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.   அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் தேர்தல்  பிரச்சாரத்தை தொடங்கினார்.

முதலில் கம்பரசம்பேட்டை பகுதியில் தொடங்கிய தேர்தல் பிரசாரனமானது முத்தரசநல்லூர், அல்லூர்,பழூர்,உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

அப்போது
அதிமுகவின் வெற்றி பற்றி   பட்டியலிட்டார்.மேலும் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து மக்களுக்காக செய்து வருகிறார்.அதிமுக அரசு மக்களுக்கு வசந்தகாலத்தை கொடுத்துள்ளது. நீர் மேலாண்மையில் முதன்மை பெற்று,தமிழக மக்கள் வாழ்வாதாரம்பெருகிடவும்,
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய்  1500 வங்கி கணக்கில் செலுத்துவோம்.

வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மேலும் 50 ஆயிரத்திலிருந்து  60 ஆயிரம் ரூபாய் உயர்தியது என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ,அல்லூர்.திருச்செந்துறைஜீயபுரம்கடைவீதி,பெரியகருப்பூர்,சின்னகருப்பூர்,மேக்குடிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *