Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக லி.மதுபாலன் பொறுப்பு ஏற்பு

No image available

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக  லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றார்    தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு

 உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (27.06.2025) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர

மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

 முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.லீ.மதுபாலன் அவர்கள் இதற்கு முன்பு சார் ஆட்சியராக சிதம்பரத்திலும், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), ஈரோடு மாவட்டத்திலும்,

கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி), கடலூர் மாவட்டத்திலும்,மாநகராட்சி ஆணையராக மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் பணியாற்றி வந்தார்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *