Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இ – பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் கட்டாய இ-பைலிங் முறையை அமல்படுத்தவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் நீதிமன்ற பணிபுறக்கணிப்பு மற்றும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

அதன் ஒருபகுதியாக, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் எதிரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வழக்கறிஞர்களின் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக லேப்டாப் மற்றும் ஸ்கேனர் போன்ற கருவிகளை வழங்கினால் நிச்சயம் இ ஃபைலிங் திட்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *