Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாநகராட்சி பணியினால் வீட்டில் சாய்ந்த மின்கம்பம்

திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெறுகிறது. இதனால் சாலைகள் மிக குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் திருச்சி திருவானைக்காவல் டிரங் ரோடு பகுதியில் கழிவுநீர் மழை நீர் வடிகால்  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிரங்க் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு முன்பாக மின்சாரம் சென்று கொண்டிருந்த கம்பம் மின்சார கம்பியுடன் வீட்டின் மேல் சாய்ந்துள்ளது. தொடர்ந்து இப்பணிகள் நடைபெறும் பகுதியில் அனைத்துமே பொதுமக்கள் பெரும் மின்னலுக்கு ஆளாகியுள்ளனர் .

தற்போது மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பம் சாய்ந்ததால் வீட்டின் முன்புறம் இருந்த மேற்கூரை ஒன்றும் சேதம் அடைந்துள்ளது. உடனடியாக அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுவது மட்டுமல்லாமல்  இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாகவும் உடனே சீர் செய்யும் பணியிலும் மாநகராட்சி,மின்சாரத்துறை ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *