திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கக்கன் காலனி பகுதியை சேர்ந்த சதீஷ் (எ) சக்திகுமார் 34/22, த.பெ.அசோகன், என்பவர் திருவெறும்பூர் ஸ்டாண்டில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் என்பவரின் வீட்டிற்கு எதிரில் மிக்ஸி பழுது பார்க்கும் கடை வைத்திருந்த பெண்ணுடன், திருவெறும்பூர் சுருளி கோவில் தெருவை சேர்ந்த ஓட்டுநர் முத்துப்பாண்டி 32/22, த.பெ. சுப்ரமணி, என்பவர் கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதனையறிந்த சதீஷ் (எ) சக்திகுமார் மேற்படி முத்துப்பாண்டி என்பரிடம் மேற்கூறிய பெண்ணுடன் பேச வேண்டாம் என்றும் கூறியும் கேட்காததால், மேற்படி சதீஷ் அப்பெண்ணின் கணவரிடம் கூறியதாகவும், இதனால், அப்பெண் தனது கணவர் தன்னை கண்டித்ததாக முத்துப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 30.06.2022 அன்று நள்ளிரவு 00.45 மணிக்கு சதீஷ் (எ) சக்திகுமார் கக்கன் காலனி பகுதியில் உள்ள ஜெயம் கட்டிடத்தின் முன்பு அமர்ந்திருந்த போது அங்கு வந்த முத்துப்பாண்டி மேற்படி சதீஷை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி விட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக, இறந்து போனவரின் தாய் பானுரேகா, 55/22, க.பெ. அசோகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் காவல் நிலைய குற்ற எண். 221/22, U/s 302 IPC – ன் படி 30.06.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கண்ட எதிரி1 முத்துப்பாண்டி32/22, த.பெ. சுப்ரமணி, என்பவரை அன்றே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார்.
இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (II -ADJ) கடந்த முன்று வருடங்களாக நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பிரமணியன், ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (30.10.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத், (II- ADJ) அவர்கள் எதிரி முத்துப்பாண்டி 32/22, த.பெ. சுப்ரமணி, என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 1,000 அபராதமும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில்
குற்றவாளிக்கு தண்டனை
பெற்று தர நீதிமன்ற
நடவடிக்கைகளை சரிவர கவனித்த திருவெறும்பூர் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர்
திருமதி. தனம் என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments