இரத்ததான முகாம் நடத்தி 100% வாக்குபதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் சக்தி இயக்கம்

இரத்ததான முகாம் நடத்தி 100% வாக்குபதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் சக்தி இயக்கம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தும் வகையில் மக்கள் சக்தி இயக்கம் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். 

                      Advertisement

மக்கள் சக்தி இயக்கம் மாநில ஆலோசகர் கே.சி நீலமேகம் , மக்கள் சக்தி இயக்கம் மாநில துணை பொதுச் செயலாளர் வெ.ரா சந்திரசேகர் துறையூர் பகுதி மக்கள் சக்தி இயக்கம் பண்பாளர்கள் ஆசிரியர் கண்ணன்,மே.க  கோட்டை ஈஸ்வரன், பொன்மலை தயானந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


முகாமை  திருச்சி காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் தொடங்கி வைத்தார் அவருடன் டாக்டர் வளர்மதி, செவிலியர்கள் சாந்தி,மகாலட்சுமி ,பாலச்சந்திரன் ராமசாமி ,சின்னபொண்ணு ,காளியம்மாள், கோடிஸ்வரி மற்றும் பலர்  ரத்ததான முகாம் இருக்கு வந்து சிறப்பித்துள்ளனர்.

  பல முறை ரத்த தானம் வழங்கிய பண்பாளர் எஸ் எம் சரவணன் சந்தானபாரதி என் கண்ணன் (81 து முறை)ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
 இதனைத்தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு வாக்களிப்போம் சமூக கடமை ஆற்றுவோம் என்ற அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது.
 எனது வாக்கு எனது உரிமை என் வாக்கு விற்பனைக்கு இல்லை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பு செயலாளர் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி உதவிபேராசிரியர் சதீஷ்குமார், மாணவர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW