Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அறுவடைக்கு தயாரான குறுவை சாகுபடி – தொடர் மழையால் அறுவடை தள்ளிப் போவதாக மணிகண்டம் பகுதி விவசாயிகள் வேதனை!!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சம்பா சாகுபடியும் மழைநீரால் மூழ்கி தண்ணீரில் மூழ்கிய விவசாயிகளுக்கு இப்போது இந்த குறுவை சாகுபடியும் மழை காரணமாக பேரிடியாக விவசாயிகள் மத்தியில் வேதனையை உண்டு பண்ணியுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மணிகண்டம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 90 நாட்கள் முடிந்து தற்போது அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களில் தண்ணீர் மிதக்கிறது.

இதனால் மணிகண்டம் பகுதி விவசாயிகள் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலையிலும், அறுவடைக் காலம் தள்ளி போவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *