Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மழையால் சேதமான வீட்டை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்

தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிதமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது இந்நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட  திருவெறும்பூர் முத்துமணிடவுன் 12 வது தெரு, செந்தண்ணீர்புரம்,  பியாரே ஜான் – ஆமினா பேகம்  இவர்களின் வீடு மலையில் இடிந்து சேதாரம் ஆனது இந்நிலையில் அவர்களை நேரில் சந்தித்து இடிந்த வீட்டை பார்வையிட்டதுடன் அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார்,  வட்டக் கழக செயலாளர் ரெங்கநாதன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *