நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (30.10.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண் 58 க்குட்பட்ட கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், அவர்கள், உதவி ஆணையர் சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments