Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மடிக்கணினி வழங்க கோரி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தர்ணா போராட்டம்!!!

Advertisement

கடந்த 2017 – 2018 ஆம் கல்வி ஆண்டில் 12 – ஆம் வகுப்பு முடித்து வெளிவந்த மாணவ, மாணவிகள் தற்போது கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறோம் . 2011 – ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் , கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை இருக்கும் என்ற உயரிய நோக்கத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். 

Advertisement

அதன்படி மூன்றாம் ஆண்டு கல்லூரியில் பயிலும் எங்களுக்கு மடிக்கணினியின் தேவை அதிகமாக உள்ளது. 12 – ஆம் வகுப்பு முடித்து வெளி வந்த மாணவர்கள் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி தரப்பட்ட நிலையில், 2017-2018 முடித்து வெளிவந்த மாணவர்களான எங்களுக்கு இன்னும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இன்னும் வரவில்லை. 

 

மேலும் இறுதியாண்டு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலும், எதிர்பாரத கோவிட் -19 காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிரபிக்கபட்ட நிலையில் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் கடந்த மே மாதம் முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் போன் மூலம் தினமும் 5 மணி நேரம் இணைய வழி வகுப்புகளில் அமரும்போது கண் பார்வை மங்குதல் மற்றும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. இது போன்ற காரணத்தினாலும் மடிக்கணினி தற்போது அவசியமாக கருதுகிறோம். 

மடிக்கணினி கேட்டு திருச்சி ஆண்டவன் கல்லூரி, இந்திரா காந்தி கல்லூரி எஸ்.ஆர்.சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவிகள் மனு அளிக்க வந்திருந்தனர். அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் திடீரென மாணவிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *