Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சியை கண்டித்து கொசுவத்தி கொளுத்தி நூதன போராட்டம்!

திருச்சி மாநகராட்சியின் எடமலைப்பட்டிபுதூர் உட்பட்ட 38, 39, 40, 41 42 ஆகிய ஐந்து வார்டுகளில் குப்பைகள் அதிகமாக இருப்பதாகவும் அதனால் கொசுத் தொல்லை என்பது அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு முன்னதாக கொசுக்களை உடனடியாக ஒழிக்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு கையில் கொசுவத்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

உடனடியாக கொசு மருந்து அடித்து கொசுவை ஒழிக்க வேண்டும். குப்பைகளை அள்ள வேண்டும் எரியாத மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கொசு வர்த்திகளை கொளுத்தி கையில் ஏந்தியவாறு மாநகராட்சி அலுவலகத்தின் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *