திமுக பிரமுகரின் பிரபல காலனி கடையில் காலனி வாங்குவது போல் நடித்து கல்லாவில் இருந்த இருந்த 50,000 எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மை வி கே சி என்னும் பிரபல காலனி கடையை அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் உமர் பாருக் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த கடையில் பேண்ட் சட்டையில் வந்த டிப் டாப் ஆசாமி காலணி வாங்குவது போல் வந்து காலணிகளை
பார்த்துக் கொண்டிருப்பது போல் நடித்து கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த கல்லாவில் வைத்திருந்த 50,000 பணத்தை லாவகமாக எடுத்துச் சென்றுள்ளார் இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி கடை உரிமையாளர் உமர் பார்க்குக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த உரிமையாளர் அங்கு வைத்திருந்த
சிசிடிவி காட்சிகளை பார்த்ததுடன் இதுகுறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சிசி டிவி காட்சிகளை ஆராய்ந்து பின்பு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதேபோல் கடந்த 19ஆம் தேதி அன்று
அதன் அருகே உள்ள கைலாஷ் நகர் பகுதியில் பால்வியாபாரியின் வீட்டிற் குள் புகுந்து தூங்கிகொண் டி ருந்த பெண்ணிடம் இரண்டரை பவுன் தாலி செயின் பறித்து சென்ற டவுசர் கொள்ளையர் களை போலீசார் தேடி வருகின்றனர் இதுபோல் திருவெறும்பூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
திமுக பிரமுகரின் கடையில் கொள்ளை-தப்பிய மர்மநபர் – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

Comments