Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேசிய விண்வெளி வாரம் – வானியல் கண்காட்சி துவக்கம்

திருச்சி மாவட்டம் துறையூர்:
அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய விண்வெளி வாரம் (World Space Week) சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு உப்பிலியபுரம் அடுத்துள்ள தா. பாதர் பேட்டை பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வானியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. அசோக்குமார் தலைமையேற்றார். நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் திரு. சுப்பிரமணியன் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி தனலட்சுமி ஆகியோர் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு வானியல் மற்றும் விண்வெளி தொடர்பான அறிவியல் உண்மைகளை விரிவாக விளக்கினர்.

அவர்கள் மாணவர்களுக்கு கோள்களின் இயக்கம், ஈர்ப்பு விசையின் செயல்முறை, சூரியக் குடும்பத்தின் அமைப்பு, செயற்கைக்கோள்களின் பணி மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (ISRO) சாதனைகள் ஆகியவற்றை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்துரைத்தனர்.

பள்ளி மாணவர்கள் பலரும் தாமே உருவாக்கிய விண்வெளி மாதிரிகள், கோள்களின் சுழற்சி மாடல்கள் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்புகள் ஆகியவற்றை கண்காட்சியில் வெளிப்படுத்தினர். இது மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டி, “அறிவியல் என்பது மனித முன்னேற்றத்தின் முதுகெலும்பு. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதில் ஒவ்வொரு மாணவருக்கும் பெருமை இருக்க வேண்டும்” என கூறினார்.

இந்த வானியல் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவில் ஆழ்ந்த ஆர்வமும், ஆராய்ச்சி மனப்பாங்கும் உருவாகியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *