Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி ரயில் நிலையத்தில் வந்த புதிய வசதி

திருச்சி ரயில் நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழகத்தில் திருச்சி வழியாக பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் தென் பகுதிகளுக்கு செல்ல முக்கிய மாவட்டமாக இருப்பதால் திருச்சி ரயில்வே கோட்டம் முக்கியமான ரயில் நிலையமாக இருந்து வருகிறது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை போன்ற பல்வேறு இடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது ஏராளமான மக்கள் திருச்சி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். திருச்சி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் உணவுகள் அனைத்தும் பிளாட்பார்களில் குறைந்த விலையில் தெற்கு ரயில்வே சார்பில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடத்தில் ஏராளமான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன் தங்கும் அறைகள், மசாஜ் நாற்காலிகளை கொண்ட ஓய்வறை

ஆடைகள் மாற்ற தனி அறை, மேஜை வசதி, சிற்றுண்டி உணவகம், குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் ஏராளமாக செய்து தரப்பட்டுள்ளது.

இந்த அறைகளில் ஒரு மணி நேரத்துக்கு 30 ரூபாய் கொடுத்து நவீன ஏசி தங்குமிடத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அறையில் ஓய்வெடுக்க 6 மணி நேரத்துக்கு 699 ரூபாய் கட்டணமும் 12 மணி நேரத்துக்கு 999 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது தவிர ஆடைகள் உள்ளிட்ட பைகளை வைக்கும் அறையை 6 மணி நேரத்துக்கு முறையே 10 ரூபாய், 20 ரூபாய், 30 ரூபாய் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

24 மணி நேரமும் பயணிகளின் சிறிய அல்லது பெரியளவிலான உடைமைகளை பாதுகாக்கும் வகையில் 3 மணி நேரத்துக்கு 15 ரூபாய் முதல் 24 மணி நேரத்துக்கு 240 ரூபாய் வரை இந்த லாக்கா் வசதியை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கண்காணிப்புடன் செயல்படும் இந்த டிஜிட்டல் லாக்கரை, ஓடிபி வழியே கைப்பேசி எண் சரிபாா்ப்பின் மூலம் தான் திறக்க முடியும் எ ன்பது தனிச்சிறப்பு.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *