Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

புளியஞ்சோலையில் 20 மெகாவாட் தயாரிக்க புதிய நீர் மின் நிலையம் – ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம்,மதுராபுரி, சித்திரைப் பட்டி, சிங்கநாந்தபுரம், காமாட்சி நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப்பணி முன்னெச்சரிக்கையாக தடைசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களையும், துறையூர் வட்டம், புளியஞ்சோலையில் நீர்மின் திட்டத்தின் கீழ் கொல்லிமலையிலிருந்து வரும் நீரை பல்வேறு இடங்களில் புதிதாக தடுப்பனை அமைத்து, வரும் நீரை பயன்படுத்தி புளியஞ்சோலையில் நீர்மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

இதற்காக தமிழக அரசு ரூபாய் 338.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அமைக்கப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,மதுராபுரி, சித்திரைப்பட்டி, சிங்களாந்தபுரம், காமாட்சி நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப்பணி முன்னெச்சரிக்கையாக தடைசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவாராசு. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிராமப் பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். துறையூர் வட்டம், மதுராபுரி, சித்திரைப்பட்டி, சிங்களாந்தபுரம், காமாட்சி நகர் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது. முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீடுகளில் உள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவுறுத்தினார்.

பின்னர் துறையூர் வட்டம், புளியஞ்சோலையில் நீர்மின் திட்டத்தின் கீழ் கொல்லிமலையிலிருந்து வரும் நீரை அசக்காடுப்பட்டி அய்யாறு குறுக்கே தடுப்பணை, கோவிலூர் அரப்பளீஸ்வரர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, தெலியங்கூடு தடுப்பணை ஈராங்குழிப்பட்டி தடுப்பணை, காடம்பள்ளம் தடுப்பணை ஆகிய இடங்களில் புதிதாக தடுப்பனை அமைத்து வரும் நீரை பயன்படுத்தி புளியஞ்சோலையில் நீர்மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 338.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அமைக்கப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின்சாரவாரிய செயற்பொறியாளர் பத்மநாதன், உதவிப் பொறியாளர் விஷ்ணு, துறையூர் வட்டாட்சியர் அகிலா மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *