Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முடிக்காணிக்கைகான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது – ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (04.09.2021) இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் துறை அமைச்சர் சேகர்பாபு  திருக்கோயில்களில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக்காணிக்கைகான கட்டணம்  05.09.2021 முதல் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பை பக்தர்கள் அறியும் வண்ணம் உடனடியாக அறிவிப்பு பதாகை வைக்க இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபன் அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

அதன்படி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக முடி காணிக்கை செலுத்தும் இடம்மான அம்மா மண்டபம் காவிரிபடித்துறை, கொள்ளிடம் படித்துறை மற்றும் கோயிலின் மூன்று வாயில்களிலும் உடனடியாக பக்தர்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *