அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திருவெறும்பூர், மணிகண்டம் மற்றும்
புள்ளம்பாடி (மகளிர்) ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில்
சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி
சேர்க்கை மூலம் பயிற்சியாளர்களுக்கான சேர்க்கை 24.08.2021 முதல் 15.09.2021
வரை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ள தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments