Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அதிமுக கூட்டத்தில் மூதாட்டியின் செல்போன் ஏடிஎம் கார்டு திருட்டு

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்த நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சந்திரமோகன் வேட்பு மனு தாக்கல் செய்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் லால்குடி தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் எம்பி குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு கிராமத்தில் உள்ள பல பெண்களை 200 ரூபாய் கொடுத்து அழைத்து வந்தனர்.

இதில் ஆதிகுடி கிராமத்தில் இருந்து வீரமணி என்ற மூதாட்டி வந்திருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் மூதாட்டி கையில் வைத்திருந்த பையை திருடி சென்றுள்ளனர். அதில் செல்போன் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை வைத்துள்ளார். 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அதிமுக கூட்டத்திற்கு வந்து செல்போன், ஏடிஎம் கார்டு திருடு போனதுதான் மிச்சம். கட்சிக்காரர்களிடம் அழைத்து வந்த நிர்வாகியிடம் கேட்டால் தனக்கு எதுவும் தெரியவில்லை என சொல்லியதால் என்ன செய்வதென்று செய்வதறியாது நின்ற மூதாட்டி நிலை பரிதாபமாக இருந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *