Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளில் பகுதிசபா கூட்டம்

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான இன்று (15.09.2025) திருச்சிராப்பள்ளி மாநக ராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5  வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு சவேரியார் கோவில் தெரு  பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் மு.அன்பழகன் அவா்கள்  தலைமை வகித்து, பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில், சவேரியார் கோவில் தெரு, ஆட்டுமந்தை தெரு, மீன்கார தெரு, மல்லிகைபுரம், ஜெனரல் பஜார், வண்ணாரப்பேட்டை, ஜெனரல் பஜார், பென்சினர், விஷப்பன் நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம் தெரு, மூலைக் கொல்லை, தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக  மனுக்களை மேயரிடம் அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார்.

முன்னதாக மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும்மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர்,  மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *