Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தென்னையில் அதிக மகசூல் பெற சிறப்பு உத்திகள் குறித்த ஒரு நாள் கட்டணமில்லா கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள் புதிய தொழில் நுட்பங்கள், செயல்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு தென்னையில் அதிக மகசூல் பெற வறட்சி மேலாண்மை தென்னை மரத்துக்கு தேவையான சத்துக்கள் தென்னையில் குரும்பை உதிர்வை கட்டுப்படுத்தி மகசூல் அதிகரிக்கும் உத்திகள், பூச்சி நோய் மேலாண்மை பற்றி ஒரு நாள் கட்டணமில்லா பயிற்சி 05.06.2024 ( புதன் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

 விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்ய 04312962854 /9171717832 அல்லது 8838126730 என்ற எண்ணில்அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொள்ளவும். மேலும் 9171717832 எண்ணில் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யலாம் பதிவு செய்ய கடைசி நாள் 04.06.2024 குறிப்பு (பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் குறிப்பேடு வழங்கப்படும்.

காலை ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணி வரை வருகை பதிவும். பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் )

இத்தகவலை சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *