"லடாக்கில் நம் எல்லைச்சாமி" - திருச்சியில் நூல் வெளியீடு!!

"லடாக்கில் நம் எல்லைச்சாமி" - திருச்சியில் நூல் வெளியீடு!!

முன்னாள் இராணுவ வீரரும் தற்போது சிறைத்துறைக்காவலராகவும் பணியாற்றும் சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய "லடாக்கில் நம் எல்லைச்சாமி" நூல் வெளியீடு குறைந்த நபர்களைக் கொண்டு சமூக இடைவெளியுடன் திருச்சியில் வெளியிடப்பட்டது.

நந்தவனம் சந்திரசேகரன் தலைமையில் எழுத்தார் மழபாடி ராஜாராம் நூலை வெளியிட வி.சுரேஷ் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். நமது இராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தின் வலியை சாதாரண பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு உயிர்த்தியாகம் செய்த ஒரு இராணுவ வீரரின் அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்திருப்பதிருக்கின்றனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

இளைய தலைமுறையினரும் நாட்டுப் பட்டை வளர்த்துக் கொள்ள துணை செய்யும் விதமாக நூல் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என மழபாடி ராஜாராம் வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இறுதியாக நூலாலாசிரியர் சந்திரபோஸ் தனது இராணுவ அனுபவத்தையும் நூல் உருவானது பற்றியும் ஏற்புரையில் விளக்கினார். முன்னதாக மலைக்கோட்டை பகுதி பா.ஜ.கா பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்க செல்வன் சிவநேசன் நன்றி தெரிவித்தார்.

Advertisement