Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பஞ்சாயத்து ஊழியர்கள்

திருச்சி அருகே மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பஞ்சாயத்து ஊழியர்கள் – குப்பையை தீ வைத்து கொளுத்திய பஞ்சாயத்து ஊழியர்கள் .திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் கீரமங்கலம் சாலையோரம் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பதில் ஊராட்சி பணியாளர்கள் தீ வைத்து எரித்து வருகின்றனர்.

 இது குறித்து ஊராட்சி பணியாளர்களிடம் கேட்ட பொழுது எங்களிடம் குப்பை அள்ளுவதற்கு வாகனம் இல்லை வாகனம் பழுதாகி விட்டது அதனால் தான் குப்பைகளை தீ வைத்து கொளுத்தினோம்.இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி பணியாளர்களிடம் கேட்டபோது புகைப்படம் ஏதும் எடுக்க வேண்டாம் நாங்கள் தண்ணீர் ஊற்றி தீயினை அணைத்து விடுகிறோம் என்று பணியாளர்கள் கூறினார்கள்.

 

குப்பையை தீ வைத்து எரிப்பதால் அருகில் வசிக்கும் மக்கள் மூச்சுத் தினரல் ஏற்படுகிறது பள்ளி குழந்தைகள் செல்வதற்கும் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது…மாவட்ட ஆட்சியர் தற்போது காற்றடி காலம் என்பதால் தீ வைத்து எதுவும் எரிக்க கூடாது என அறிவுறுத்திருந்தார்.

குப்பைகளை தீவைத்து எரித்த குறித்து சமூக ஆர்வலர்கள் காற்று மாசுபடுதல் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *